×

புதுச்சேரியில் பிரபல நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்


புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். உருளையான்பேட்டை சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ.16,200க்கு செல்போன் வாங்கிய நிலையில் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டுவதாக புகார். ரூ.1 லட்சம் தரவில்லை என்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசார் என கூறி, நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

 

The post புதுச்சேரியில் பிரபல நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Urulayanpet ,MLA Nehru ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை